search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தவ் தாக்கரே"

    • மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார்
    • பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்

    சிவசேனா தேர்தல் பிரச்சார பாடலில் இருந்து 'இந்து தர்மா' மற்றும் 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதற்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடந்த வாரம், கட்சியின் பிரச்சார பாடலாக 'மஷல் கீத்' பாடலை வெளியிட்டோம். அதில் 'இந்து தர்மம்', 'ஜெய் பவானி' என்ற இரண்டு வார்த்தைகளுக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்தது. பாடலில் 'ஜெய் பவானி, ஜெய் சிவாஜி' என்ற முழக்கம் உள்ளது, இது மகாராஷ்டிரா மற்றும் மராத்தியின் பெருமை.

    மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு, மகாராஷ்டிராவின் குலதெய்வமான துல்ஜா பவானி தேவி மீது இவ்வளவு வெறுப்பு இருப்பதாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்று 'ஜெய் பவானி'யை நீக்கச் சொல்கிறார்கள், நாளை 'ஜெய் சிவாஜி'யை நீக்கச் சொல்வார்கள். இதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், "நரேந்திர மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்.

    இந்த இரண்டு பேச்சுகளையும் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதி விளக்கம் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எனவே தேர்தல் ஆணையம் இப்போது எங்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், அந்த ஆணையம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தவ் தாக்கரே பதில் அளித்துள்ளார். 

    • தேர்தலில் வென்றால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுலா.
    • இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சியின் புதிய கீதத்தில் இருந்து "ஜெய் பவானி" மற்றும் "இந்து" என்ற வார்த்தைகளை நீக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) நோட்டீஸ் வந்துள்ளதாகவும், ஆனால் அதைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, "கீதத்திலிருந்து 'ஜெய் பவானி'யை நீக்கக் கோருவது மகாராஷ்டிராவை அவமதிக்கும் செயலாகும்" என்றார்.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா தேர்தல்களில் 'பஜ்ரங் பலி கி ஜெய்' எனச் சொல்லி பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

    தேர்தலில் வென்றால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்வோம் என பிரசாரங்களில் அமித்ஷா பேசி வருகிறார்.

    இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எங்கள் தேர்தல் பிரசார பாடலில் இருந்து 'இந்து', 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்கச் சொல்லி எங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நான் தேர்தல் ஆணையத்திடம் கூறிக்கொள்ள விரும்புவது...

    அந்த வார்த்தைகளை நாங்கள் நீக்க மாட்டோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் பாஜகவின் முதல் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது
    • உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி போலியானது - மோடி

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் பாஜகவின் முதல் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றனர்.

    அப்போது பேசிய மோடியும் அமித் ஷாவும் , உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி போலியானது என்று தெரிவித்தனர்.

    இதற்கு விளக்கம் அளித்த உத்தவ் தாக்கரே "சிவசேனா போலியானது என்கிறார் நரேந்திர மோடி. அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். எங்கள் கட்சி அவரது கல்லூரி பட்டமல்ல" என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும், அமித் ஷாவிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களது இந்த தேர்தல் பிரசாரத்தில் உங்களிடம் உள்ள தலைவர்களில் எத்தனை பேர் பாஜகவில் இருந்து வந்தவர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்திய மக்களை தனது அடிமைகளாக நடத்தும் மோடி, 'பாரத் சர்க்கார்' என்பதற்குப் பதிலாக 'மோடி சர்க்கார்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இந்த அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள நாங்கள் கோழைகள் அல்ல, இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • நாட்டை கொள்ளை அடித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
    • தற்போது தேர்தல் பத்திரம் தொடர்பான வெளிப்பாடுகள் பா.ஜதானவின் கொள்ளையை வெளிப்படுத்தியுள்ளது.

    எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜனதா அதிகபட்சமாக சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1,400 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜனதா அதிக நன்கொடை பெற்றுள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. மிரட்டி பணம் பெற்றதாக குற்றம் சாட்டுகின்றன.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் கொள்ளை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

    தேர்தல் பத்திரம் தொடர்பான வெளிப்பாடுகள் காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளை அடித்துவிட்டது என்று தொடர்ச்சியாக கூறிவரும் பா.ஜதானவின் கொள்ளையை வெளிப்படுத்தியுள்ளது. கொள்ளையடித்த இவர்கள் கையில் நாட்டை கொடுக்கப் போகிறீர்களா?. நாட்டு மக்கள் விக்சித் பாரத் (வளர்ந்த நாடு) குறித்து கனவு கண்டு கொண்டிருக்கும்போது, பா.ஜனதா அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து நாட்டை கொள்ளை அடிக்க விரும்புகிறது.

    எங்களது கட்சி தலைவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. கார்பரேட் நிறுவனங்கள் பா.ஜனதாவுக்கு அதிக நன்கொடைகள் வழங்க மிரட்டப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை பெற்றுள்ளன. அதற்குப் பதிலாக பா.ஜனதாவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் வழங்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

    பா.ஜனதாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை கொள்ளை அடிக்க முடியாத காரணத்தில், தன்னுடைய தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • மத்திய மந்திரியாக இருக்கும் நிதின் கட்கரி பெயர் பா.ஜனதாவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
    • பா.ஜனதா அவமதித்தால் எங்களுடன் வந்து விடுங்கள் என உத்தவ் தாக்கரே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதின் கட்கரி. இவர் மத்திய மந்திரியாக உள்ளார். தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.

    பா.ஜனதா முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மூத்த தலைவர்கள் பலரது பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், நிதின் கட்கரி பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர் அவமதிக்கப்படுகிறார் என மகாராஷ்டிர மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

    இது தொடர்பாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, அவமதிக்கப்பட்டால் எங்களுடைய கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், "நீங்கள் பா.ஜனதா கட்சியால் அவமதிக்கப்பட்டால் மகா விகாஷ் அகாதி (உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) கூட்டணிக்கு வந்து விடுங்கள். இதை இரண்டு நாட்களுக்கு முன்னதாக நிதின் கட்காரியிடம் சொன்னேன். தற்போதும் சொல்கிறேன்.

    உங்களுடைய வெற்றியை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் அரசு அமைத்த பிறகு எங்களது அரசாங்கத்தில் உங்களுக்கு மந்திரி பதவி வழங்குவோம். அது அதிகாரமிக்க பதவியாக இருக்கும்" என்றார்.

    உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியிருந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் "தெருவில் நிற்கும் ஒருவர் மற்றொருவரை பார்த்து நான் உன்னை அமெரிக்க ஜனாதிபதியாக்குகிறேன் என்று சொல்வது போல் உள்ளது" என கிண்டல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது.
    • உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களில் போட்டியிடுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன.

    இந்த மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன. இந்தியாவில் அதிக மக்களவை இடங்களை கொண்ட 2-வது மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு கட்சிகளும் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மும்பையில் உள்ள தொகுதிகளை ஒதுக்குவதில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி இடையே இழுபறி நீடித்து வந்தது. இதனால் ராகுல் காந்தி உத்தவ் தாக்கரேயிடம் டெலிபோன் மூலம் பேசினார்.

    இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன. விரைவில் எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும்.

    48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும், வெற்றி பெற்றிருந்தன.

    சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டிருந்தது. தற்போது சிவசோன 2-வது உடைந்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 3 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் ஒரு இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. சரத்பவார் கட்சி 15 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது.

    வன்சித் பகுஜன் அகாதி என்ற மாநில கட்சி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் இருந்து 2 இடங்களை பெறும். சுயேட்சை வேட்பாளர் ராஜு ஷெட்டி சரத் பவாரிடம் இருந்து ஒரு இடம் பெற்றுக் கொள்வார்.

    • மும்பை தொகுதிகளை பிரிப்பதில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே கட்சி இடையே இழுபறி.
    • நான்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளது.

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் துரிதப்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி, அகிலேஷ் யாதவ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

    தற்போது மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைவதற்கான வேலைகளை காங்கிரஸ் செய்து வருகிறது. 2019 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), காங்கிரஸ் ஆகியவை மகா கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இது பொருந்தாத கூட்டணி என விமர்சனம் செய்யப்பட்டது.

    பின்னர் ஏக் நாத் ஷிண்டே, தனது அணிதான் சிவசேனா கட்சி என அறிவித்து பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதனால் மகா கூட்டணி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து போனது.

    தற்போது மகா கூட்டணி மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. 48 தொகுதிகளை மூன்று கட்சிகளும் பகிர்ந்து கொண்டு போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    உத்தவ் தாக்கரே 18 தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். மேலும் மும்பையில் உள்ள தெற்கு மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, தென்மேற்கு மும்பை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

    அதேவேளையில் காங்கிரஸ் மும்பையில் தென்மத்திய மும்பை, வடக்கு மத்திய மும்பை, வடமேற்கு மும்பை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

    மும்பையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. இதனால் ராகுல் காந்தி நேற்று உத்தவ் தாக்கரேயிடம் சுமார் ஒரு மணி நேரம் போனில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அப்போது மும்பை தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மூன்று கட்சிகளுக்கு இடையில் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

    2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரே கட்சி 22 இடங்களில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த மூன்று தொகுதிகளும் அடங்கும்.

    40 தொகுதிகள் குறித்து முடிவு செய்து விட்டதாகவும், 8 தொகுதிகள்தான் இழுபறியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பா.ஜனதாவுக்கு கைக்கெடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இந்த மகா கூட்டணி 48 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால் அது பா.ஜனதாவுக்கு பின்னடைவாக கருதப்படும்.

    2019 தேர்தல் பா.ஜனதா- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கூட்டணி 41 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பாஜனதா 23 இடங்களை கைப்பற்றியிருந்தது.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்வு ஜூன் 21-ம் தேதி அன்று சிவசேனா இரண்டாகப் பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது. ஷிண்டே முகாம் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார். ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

    ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. 53 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.

    இந்நிலையில், சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    • நான் அதை செய்தேன். முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன் என சொல்லி கொண்டிருக்கிறார்.
    • முதல்வராக இருந்த இரண்டரை ஆண்டு காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

    இரண்டரை வருடமாக ஆட்சியில் இருந்தபோது மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர் வீட்டில் உட்கார்ந்து கட்டுரை எழுத வேண்டும் என பா.ஜனதா தலைவரும் அம்மாநிலத்தின் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்துள்ளார்.

    இதுகுறித்து தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில் "நான் பறவையாக இருந்தால், நான் கிரிக்கெட்ராக இருந்தால் இப்படி நாம் சில நேரங்களில் கட்டுரைகள் எழுதுவோம். அதேபோன்று ஒரு நபர் இந்த மாநிலத்தில் உள்ளார். நான் அதை செய்தேன். முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன் என அவர் சொல்லி கொண்டிருக்கிறார். அவர் முதல்வராக இருந்த இரண்டரை ஆண்டு காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

    அவர் வீட்டிலேயே உட்கார்ந்து கட்டுரை எடுத வேண்டும். நாங்கள் மக்களுக்கான சேவை செய்வோம்" என்றார்.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடரலாம்.

    மும்பை:

    மகாராஷ்டிரா முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் நேற்று முடிவை அறிவித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா அணி. ஷிண்டே அணி எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது. சட்டமன்ற கட்சித்தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே, சபாநாயகரின் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • சபாநாயகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்
    • சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார்

    முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் டிசம்பர் இறுதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. சபாநாயகர் தனது உத்தரவை அறிவிக்காததால் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் இதுதொடர்பாக அவர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார். நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேசுவது போல இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். சபாநாயகரின் செயல் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த உத்தவ் தாக்கரே, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சார்பற்ற முறையில் தனது கடமையை ஆற்றுவாரா என்ற சந்தேகதம் எழுகிறது எனவும் கூறினார்.

    உத்தவ் தாக்கரேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சபாநாயகர் ராகுல் நர்வேகர், "ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர். சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக நாங்கள் சந்தித்துக்கொள்வது அவசியம். இதில் உள்நோக்கம் இருப்பதாக கூறுவது தவறு. இது தொடர்பாக யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லை" என கூறினார். மேலும், பாஜகவைச் சேர்ந்த நான், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்பி அணில் தேசாய் மற்றும் ஷரத் பவார் அணியைச் சேர்ந்த ஜெயந்த் பாடில் ஆகியோரை விமான நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளேன். அதற்கும் உள்நோக்கம் கற்பிப்பார்களா? என கேள்வி எழுப்பினார். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும் இந்த விவகாரத்தில் நான் நல்ல முடிவை எடுப்பேன். எனது முடிவு தகுதியின் அடிப்படையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • கடவுள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    • அயோத்தியில் அதிநவீன விமான நிலையம், ரெயில் நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    மும்பை:

    அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி மிக மிக கோலாகலமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

    எதிர்காலத்தில் அயோத்திக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அதை கருத்தில் கொண்டு அந்த நகரத்தின் உள் கட்டமைப்பை பிரதமர் மோடி மேம்படுத்தி வருகிறார். அதன் முதல் கட்டமாக அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், அயோத்தி ரெயில் நிலையமும் சீரமைக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே கூறுகையில், எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அங்கு செல்ல எனக்கு அழைப்பும் தேவையில்லை. கடவுள் ராமர் ஒரு கட்சியின் சொத்து அல்ல, அனைவருக்கும் சொந்தமானவர். இந்த நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என விரும்புகிறேன். இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, அரசாங்கம் அல்ல என தெரிவித்தார்.

    ×